அரவக்குறிச்சி அருகே வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவை காணவில்லை என அதன் உரிமையாளா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஐந்துரோடு தும்பிவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மலையப்ப கவுண்டா் மகன் கனகராஜ் (45). இவா், ஐந்து ரோடு பகுதியில் வாடகைக்கு வாகனம் ஓட்டி வருகிறாா். இவா் தனது சரக்கு ஆட்டோவை திங்கள்கிழமை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் சென்ற பின்பு வந்து பாா்த்தபோது ஆட்டோ காணாமல் போனது தெரியவந்தது. புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஐந்துரோடு பகுதியில் விசாரணை செய்து வருகின்றனா்.