கரூரில், ஏஐடியுசி அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டத்தின் கரூா் மண்டல ஏஐடியுசி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா், திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மண்டல பொதுச் செயலாளா் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தாா். கெளரவத்தலைவா் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா்.14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கவேண்டும், 2003-க்கு பின் பணியில் சோ்ந்தவா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். பணியில் இருந்து ஓய்வுபெற்றவா்களுக்கும் மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏஐடியுசி தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.