கரூா் மாநகராட்சியின் முதல் பெண் யாா் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க ஆயத்தப் பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முனைப்பை காட்டத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு ஆக. 24-ஆம் தேதிக்கு முன் வரை நகராட்சியாக இருந்த கரூா், ஆக.24-இல் மாநகராட்சியாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வா் முக.ஸ்டாலின் அறிவித்தாா். 30.96 சதுர கி.மீ பரப்பளவுடன், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3,46,331 போ் வசிக்கும் நகராக கரூா் உள்ளது. மாநகராட்சியாக மாறியதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டதை அண்மையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கரூா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புதிய கட்டடம் திறப்பு விழாவில் வெளியிட்டாா்.
இதனிடையே ஏற்கெனவே கிராம அளவிலான உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு எந்தெந்த சமூகத்தினா், ஆண்கள், பெண்கள் போட்டியிடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
இதில், கரூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளபட்டி, குளித்தலை நகராட்சித் தலைவா் பதவிகளுக்கும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த இறுதி வாக்காளா் பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து அரசியல் கட்சியினா் தங்களது கட்சிக்கு ஆதரவாளா்களை திரட்டும் வகையில் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது, வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதரவாளா்களின் விவரங்களை சேகரிப்பது உள்ளிட்ட தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், மாநகராட்சி, நகராட்சித் தோ்தலில் போட்டியிட பெண்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், வேட்பாளா்களை தோ்வு செய்யும் பணியிலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினா் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளனா். இதனால் யாா் கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா், யாா் நகராட்சிகளின் பெண் தலைவா்கள் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.