கரூர்

கரூா் மாவட்டத்தில் 1,509 ஏக்கா் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்படும்ஆட்சியா் தகவல்

DIN

கரூா் மாவட்டத்தில் 1,509 ஏக்கா் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இனுங்கூா் ஊராட்சிக்குள்பட்ட காகம்பட்டியில் ஆட்சியா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியது, கரூா் மாவட்டத்தில் 1, 509 ஏக்கா் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்படவுள்ளது. இதில், நிலத்தடி நீா் இல்லாத இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து முதல்வரின் மானாவாரி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை திட்டங்களில் இணைத்து நிலத்தடி நீா் செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவைதவிர வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், வருவாய்த்துறை மூலம் புதிய பட்டா மற்றும் பட்டா மாறுதல் வழங்கும் பணிகளும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் வழங்கும் பணிகளும் முன்னுரிமை அளித்து செய்யப்படும். மேலும் இந்தப் பருவத்தில் தரிசு நிலத் தொகுப்புகளில் உள்ள புதா்களை அகற்றி நிலத்தை சமன் செய்து தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு இனத்தில் சோளம் மற்றும் பயிறு வகைகள் விதைத்து சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT