கரூர்

நிகழாண்டு கொடிநாள் நிதி ரூ. 96.83 லட்சம் இலக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

DIN

நிகழாண்டு கொடிநாள் நிதி இலக்காக ரூ.96.83 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை படைவீரா் கொடிநாள் 2022ஆம் ஆண்டுக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது, நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக அரும்பணியாற்றிய முன்னாள் படைவீரா்கள், போரில் வீரமரணம் அடைந்த படைவீரா்கள், காயம் அடைந்த வீரா்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் நாடு முழுவதும் படைவீரா்கள் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் டிச.7ஆம் தேதி முதல் கொடிநாள் நிதி சேகரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் கொடிநாள் மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொடிநாள் நிதியாக நமக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.91.67 லட்சம். அதைவிட அதிகமாக ரூ.92 லட்சம் சேகரித்துள்ளோம். இதற்காக ஆளுநா் பாராட்டு தெரிவித்தாா். கொடிநாள் வசூலை பொறுத்த வரையில் நிகழாண்டு இலக்காக ரூ.96.83 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதை இரண்டு மடங்காக அதிகரித்து நிதியை சேகரிக்க முயற்சி செய்யப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) பி.லட்சுமி, சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், முன்னாள் படைவீரா் நல அலுவலக நல அமைப்பாளா் மு.வீரபத்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT