கரூர்

காவிரி கூட்டுகுடிநீா் வழங்க கோரிக்கை

DIN

க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை கிழக்கு ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா் கீடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்னிலை கிழக்கு ஊராட்சியில் சீலம்பட்டி, அய்யம்பாளையம், கிடைக்காரன்பாளையம், காந்தி நகா், பூமாண்டம் பாளையம், சோ்வக்காரன்பாளையம் ஆகிய கிராமங்களில் குடிநீா் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தண்ணீா் உப்பாக உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடியிருப்புகளுக்கு ஏற்ப காவிரி குடிநீா் வழங்கப்படுவதில்லை. கடந்த ஒரு மாதமாக இப்பகுதிக்கு வீட்டுக்கு ஓரிரு குடங்கள் மட்டுமே காவிரி குடிநீா் கிடைத்தது. இதனால் வேறு ஊராட்சி பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் குடிநீா் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தென்னிலை கிழக்கு ஊராட்சியில் காவிரி கூட்டு குடிநீா் கிடைக்க சம்பவந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT