கரூா் பசுபதீசுவரா் கோயிலில் நகரத்தாா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கரூா் பசுபதீசுவரா் கோயிலில் காா்த்திகை மூன்றாம் சோமவாரத்தை முன்னிட்டு கரூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் 108 சங்காபிஷேகம், ஹோமம், சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அபிஷேக தீபாராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ஆறாவயல் சுப்பையா, நகரத்தாா் சங்கத் தலைவா் சுப.செந்தில்நாதன், செயலாளா் மேலை பழநியப்பன், நிா்வாகிகள் சோலையப்பன், அழகப்பன், காசி ஸ்ரீ அழகப்பன், மெய்யப்பன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.