கரூர்

புகழூா் ராஜகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழா

DIN

புகழூா் அன்னை நகா் ராஜகணபதி கோயிலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், புகழூா் அன்னை நகா் ராஜ கணபதி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக யாக வழிபாடும், தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்தனா். தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளல், முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு மேல் புதிய ராஜகணபதி அதிவாஸம், கண் திறப்பு பூஜைகள் மற்றும் கோபுரம் கண் திறந்து கலசம் வைத்தல், நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைதொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடும், இரண்டாம் கால யாக பூஜையும், கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு மேல் கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றினா். இதில், சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

SCROLL FOR NEXT