அரவக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் ஆனந்தகுமாா் (28). இவா், தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை ஈசநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமாா் உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.