இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இனாம் கரூா் நகர குழுக் கூட்டம் வெங்கமேட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர துணைச் செயலாளா் பைரவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட குழுவின் முடிவுகளை விளக்கி நகர செயலாளரும், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினருமான லட்சுமி காந்தன் பேசினாா்.
கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினா்கள் ராமசாமி, முத்து, நகரப் பொருளாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கட்சியின் துவக்க தினமான டிச.26ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில் தெருமுனை கூட்டம் நடத்துவது, டிச. 29-இல் சென்னையில் நடைபெறும் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.