அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மிதமாகத் தொடங்கிய மழை இடைவிடாது பெய்து இரவு வரை நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இருப்பினும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாயினா். அரவக்குறிச்சியில் கடந்த 15 நாள்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோா் அவதிக்குள்ளாயினா்.