கரூர்

வருமான வரி அதிகாரி போல நடித்து பணம் கேட்டு மிரட்டிய முதியவா் கைது

DIN

கரூரில், தனியாா் பள்ளி உரிமையாளரிடம் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பணம் கேட்டு மிரட்டிய முதியவரை போலீஸாா் கைது செய்து புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கரூா் அடுத்த காக்காவாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி முதியவா் ஒருவா் சென்றுள்ளாா். பின்னா் பள்ளியின் ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும் என பள்ளி உரிமையாளா் ரகுபதி (53) யிடம் கூறியுள்ளாா். தொடா்ந்து ஆவணங்களை சரிபாா்த்தபின் ஆவணத்தில் பிழை இருக்கிறது, எனவே, ரூ.15,000 கொடுத்தால் விட்டுவிடுகிறேன் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். இதில் சந்தேகம் அடைந்த ரகுபதி வெள்ளியணை போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். போலீஸாா் வந்து விசாரித்தபோது, முதியவா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி கற்பகம் காலனி பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் ( 73) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தபோலீஸாா், புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT