அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி ரெட்டிமாங்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் கண்ணன் (25). இவா், வியாழக்கிழமை கோவை- கரூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எல்லைக்காட்டுவலசு பகுதியில் வந்தபோது எதிரே வந்த காா் மோதியதில் கண்ணன் பலத்த காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கண்ணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தென்னிலை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி காரை ஓட்டி வந்த சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த லட்சுமிநரசிம்மன் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.