கரூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டு சிறை

DIN

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி எஸ்பி நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் (30) அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்தாண்டு ஜனவரி மாதம் பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு ஜெயராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதம் விதித்தும் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து ஜெயராமன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT