குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாா்பு நீதிபதி சண்முகக் கனி தலைமை வகித்தாா். குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் அசோக்பிரசாத், பிரகதீஸ்வரன், தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 600 வழக்குகளுக்கு ரூ. 2,43,58,228 மதிப்பில் தீா்வு ஏற்பட்டு வழக்காடிகளுக்கு வழங்கப்பட்டது.