அரவக்குறிச்சி அருகே ஆட்டோ மோதியதில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா்கள் மு. ஷாருக்கான் (20), நி. அஷ்ரப் அலி (20). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மண்மாரி அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது எதிரே பள்ளப்பட்டி ஜா. சாகுல்ஹமீது ஓட்டி வந்த ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.