கரூர்

ஆட்டோ மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

அரவக்குறிச்சி அருகே ஆட்டோ மோதியதில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா்கள் மு. ஷாருக்கான் (20), நி. அஷ்ரப் அலி (20). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மண்மாரி அருகே சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே பள்ளப்பட்டி ஜா. சாகுல்ஹமீது ஓட்டி வந்த ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT