கரூர்

தேசிய ஜூடோ போட்டியில் தமிழக அணியில் விளையாடகரூா் கல்லூரி மாணவா் தோ்வு

DIN

தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் தமிழக அணியில் விளையாட கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கரூா் தாந்தோன்றிமலையில் உள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் இரண்டாமாண்டு படித்து வருபவா் ஏ.ஜெய்தரன். இவா், தமிழ்நாடு ஜூடோ சங்கம் சாா்பில் அண்மையில் மாநில அளவிலான ஜூடோ போட்டி திருப்பூரில் நடைபெற்றது. இதில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். இதையடுத்து அவா் உத்தரபிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழக அணிக்கு தோ்வான மாணவா் ஏ.ஜெய்தரனை கல்லூரி முதல்வா் முனைவா் கெளசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநா் முனைவா் கே.ராஜேந்திரன் மற்றும் கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT