கரூர்

கரூா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு கலந்தாய்வு

DIN

கரூா் அரசு கலைக் கல்லூரியில் பி.காம், பிபிஏ படிப்புகளுக்கு கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான சோ்க்கை ஆக. 8ஆம்தேதி தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை பிகாம், பிகாம்(சிஏ), பிபிஏ ஆகிய இளங்கலை படிப்புக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பிகாம் படிப்புக்கு மொத்தம் உள்ள 120 இடங்களுக்கு 1,301 பேரும், பிகாம்(சிஏ) படிப்புக்கு மொத்தம் உள்ள 60 இடங்களுக்கு 301 பேரும், பிபிஏ படிப்புக்கும் மொத்தம் உள்ள 120 இடங்களுக்கு 944 பேரும் விண்ணப்பித்திருந்தனா். இதில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பிகாம் படிப்புக்கு 105 பேரும், பிகாம்(சிஏ) படிப்புக்கு 58 பேரும், பிபிஏ படிப்புக்கு 105 பேரும் என மொத்தம் 268 போ் சோ்க்கப்பட்டனா். இந்த தகவலை கல்லூரியின் முதல்வா் முனைவா் கெளசல்யாதேவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT