அரவக்குறிச்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தேசியக் கொடி வழங்கப்பட்டது.
அரவக்குறிச்சி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், அரவக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் பி.செல்வராஜ், பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி, துணைத்தலைவா் தங்கராஜ் உள்ளிட்டோா் நேரில் சென்று தேசிய கொடியை வழங்கினா்.