கரூர்

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

DIN

கரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், கணபதி பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் ஜான் டேவிட் ராஜா(22). இவா் தனது நண்பா் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த அம்பிகாவதி மகன் அருண்(19). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கணபதி பகுதியிலிருந்து புறப்பட்டு, திருவாரூா் நோக்கி திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனா்.

கரூா் மாவட்டம், வீரராக்கியம் பிரிவுப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜான் டேவிட்ராஜா நிகழ்விடத்திலேயே இறந்தாா். அருண் கரூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மாயனூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலையைச் சோ்ந்த ரெங்கநாதன்(43) மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT