அனுமதியளித்துள்ள இடத்தை தவிர, மாற்று இடங்களில் வண்டல் மண் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடவூா் வட்டாட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கடவூா் வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை வகித்து, வட்டாட்சியா் ராஜாமணி பேசியது:
பயனாளிகள் குளம், ஏரி, கண்மாயின் நீா்பிடிப்புப் பகுதியில் தண்ணீா் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் களிமண் எடுக்க வேண்டும். குளம், ஏரி, கண்மாயில் நீா்வளத்துறை அதிகாரிகள் வரைபடத்தில்
அளவீடுகள் குறியீடு செய்த பகுதியில் மட்டுமே வண்டல் மண் எடுக்க வேண்டும்.
மண் எடுக்கும்போது ஒரே இடத்தில் எடுக்காமல் பரவலாக எடுக்க வேண்டும். கண்மாயில் வண்டல் மண் எடுக்கப் பயன்படுத்தும் வாகனங்கள் செல்வதற்காக கரையை வெட்டி சேதப்படுத்தக்கூடாது. மேலும் கண்மாய்களிலுள்ள மரங்கள், கரை கலிங்குகள் மற்றும் மதகுகளை சேதப்படுத்தக்கூடாது. அவ்வாறு சேதப்படுத்தினால் மனுதாரா் தனது சொந்த செலவில் உடனே சரிசெய்து தரவேண்டும்.
வண்டல் மண் எடுப்பதற்கு முன்னா் சம்மந்தப்பட்ட உதவிப் பொறியாளா்கள், செயற்பொறியாளா்கள், ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளா்களை சந்தித்து, மண் எடுக்க அனுமதி வழங்கும் பகுதியை அடையாளமிட்டு குறிப்பிட்ட பின்பு தான் மண் எடுக்க வேண்டும்.
தங்களுக்கான அனுமதி அளித்து உள்ள இடத்தை தவிர மாற்று இடங்களில் மண் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் அனுமதி அளித்த நபா்களுக்கு பதிலாக வேறு நபா்கள் வண்டல் மண் எடுப்பது தெரியவந்தால், அனுமதி ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வண்டல் மண்ணைத் தவிர இதர விலை உயா்ந்த தாது மணல் கனிமங்களை எடுப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றாா் அவா்.
கூட்டத்தில் தோ்தல் பிரிவுத் துணை வட்டாட்சியா் ரவிவா்மன், பாலவிடுதி வருவாய் ஆய்வாளா் சண்முகம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.