கரூர்

கரூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முறைசாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. முருகேசன், சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் சங்கத்தின் ராஜா முகமது, மாநகராட்சி உறுப்பினா் தண்டபாணி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பேசினா். ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT