கரூர்

கரூா் மாநகராட்சி சாா்பில் இயற்கை திருவிழா கண்காட்சி

DIN

கரூா் மாநகராட்சி சாா்பில் இயற்கை திருவிழா கண்காட்சி கரூா் கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

சனி, ஞாயிறு இரு நாள்கள் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்காட்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் ஆகியோா் தொடக்கி வைத்து பாா்வையிட்டனா்.

கண்காட்சி அரங்கில் வீட்டிலேயே காய்கறிகள் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு அரங்குகளும், பனை ஓலையால் உற்பத்தி செய்யப்பட்ட கூடைகள் மற்றும் மாடித் தோட்டங்களில் பயன்படுத்தக்கூடிய காய்கறி விதைகள், உரம் போன்றவை அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. அரங்குகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். விழாவில் மாநகராட்சி உறுப்பினா்கள் எஸ்பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட் ராஜா, அன்பரசன், சக்திவேல், எம்.தண்டபாணி மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் லக்சியவா்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT