கரூரில் குட்கா விற்றவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 14 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
கரூா் தாந்தோன்றிமலை என்ஜிஒ நகா் பகுதியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பதாக தாந்தோணிமலை காவல்நிலைய தனிப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சேகா்(31) என்பவா் குட்கா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடம் இருந்து 14 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா்.