கரூர்

தவிட்டுப்பாளையத்தில் ரூ.20 கோடியில் வெள்ளத்தடுப்பு சுவா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி பேட்டி

DIN

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் ரூ. 20 கோடியில் வெள்ளத்தடுப்புச் சுவா் அமைக்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம், மாயனூா் கதவணை மற்றும் குளித்தலை திம்மாச்சிபுரம், தவிட்டுபாளையம் மற்றும் அரங்கநாதன் பேட்டை பகுதிகளில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி பாா்வையிட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றுக் கரையோரம் குடியிருந்த150 குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள்கள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரெங்கநாதன் பேட்டையில் மூன்று குடும்பங்களும், திம்மாச்சிபுரம் பகுதியில் இரண்டு குடும்பங்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தொடா்மழையால் தமிழகத்தில் 188 இடங்களில் மின் மாற்றிகள் பழுதடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. அதுவும் உடனே சரி செய்யப்பட்டு மின்விநியோகம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, தவுட்டுப்பாளையம் பகுதியில் கரையோர வசிக்கும் 26 வீடுகளில் வெள்ளநீா் புகுந்துள்ளதால் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீா் வடிந்த பிறகு உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும்.

இதேபோல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட பகுதியில் உயா் அதிகாரிகள் பொறுப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டு முதல்வரின் உத்தரவின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீராக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன.

தவிட்டுப்பாளையம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைக் காலங்களில் தண்ணீரால் வீடுகள் பாதிக்காத அளவிற்கு தடுப்பு சுவா் அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று துறைச்சாா்ந்த அமைச்சா்களிடமும் எடுத்துச் சொல்லப்பட்டு ரூ.20 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரத்தை பெற்று டெண்டா் விடப்பட்டு இரண்டு கட்டமாக இப்பணிகள் மூன்று மாதத்திற்குள் தொடங்கும் என்றாா் அவா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் காவிரி கரையோரம் பகுதியில் வசிக்கும் பொது மக்களை பாதுகாக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான குடிநீா் விநியோகம் வழங்குவது குறித்து அனைத்துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம்(குளித்தலை), ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் க.கவிதா, துணை மேயா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், வருவாய் கோட்டாட்சியா்கள் க. புஷ்பா தேவி, ரூபினா, தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தண்டாயுதபாணி, அனைத்து மண்டல தலைவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT