அரவக்குறிச்சி பகுதிக்குள்பட்ட 63 இடங்களில் 6ஆவது கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 3,450 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில், மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள், பேரூராட்சி அலுவலா்கள், ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.