கரூர்

போக்குவரத்து பணியாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் போக்குவரத்துப் பணியாளா்கள் சம்மேளனத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் வி.பழனிசாமி தலைமை வகித்தாா்.மண்டல இணைச் செயலாளா் எஸ்.உத்திரராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வூதியா்களின் 72 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துக்கழக பணியாளா்கள் சம்மேளனத்தினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT