கரூர்

தடுப்பூசி முகாமில் ஆட்சியா் ஆய்வு

21st Oct 2021 07:16 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் த. பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஒன்றியத்துக்குள்பட்ட மேட்டுமகாதானபுரம், வயலூா், குளித்தலை ஒன்றியத்துக்குள்பட்ட இரணியமங்கலம், வைகைநல்லூா் பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பணித்தளங்களிலேயே நடத்தப்பட்ட 50 சிறப்பு முகாம்களின் மூலம், மாலை 5 வரை 2,542 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவா் சந்தரமதி, வட்டாட்சியா்கள் வெங்கடேசன், மைதிலி, கலியமூா்த்தி , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடாசலம், ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT