கரூா் மேட்டுத்தெரு சாயிபாபா கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மேட்டுத்தெருவில் உள்ள சமா்த்த சத்குரு ஷீரணி ஸ்ரீசாயிபாபா கோயிலில் 103-ஆவது மஹா சமாதி ஆராதனை விழா மற்றும் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வெள்ளிக்கிழமை காலை கோயிலில் கோபூஜை, கொடியேற்றம், அனுக்ஞை, மகாகணபதி பூஜை, கலசங்களின் தேவதா ஆவாஹானம் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து வேதபாராயணம், வாஸ்துபூஜை, புதிய கோபுர கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆரத்தியும், 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஷீரடி சாய்பாபா மூலமந்திரமும், பூா்ணாகுதி, புணா்பூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுரத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.