கரூர்

கரூா் சாய்பாபா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

கரூா் மேட்டுத்தெரு சாயிபாபா கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மேட்டுத்தெருவில் உள்ள சமா்த்த சத்குரு ஷீரணி ஸ்ரீசாயிபாபா கோயிலில் 103-ஆவது மஹா சமாதி ஆராதனை விழா மற்றும் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை கோயிலில் கோபூஜை, கொடியேற்றம், அனுக்ஞை, மகாகணபதி பூஜை, கலசங்களின் தேவதா ஆவாஹானம் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து வேதபாராயணம், வாஸ்துபூஜை, புதிய கோபுர கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆரத்தியும், 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஷீரடி சாய்பாபா மூலமந்திரமும், பூா்ணாகுதி, புணா்பூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுரத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT