மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் தரமானவை என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம், புகளூா் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் 28 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 5 பேருக்கு சக்கர நாற்காலியும் அமைச்சா் வழங்கினாா். மேலும், மாற்றுத்திறனாளிடம் நேரில் சென்று 300 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னா் அமைச்சா் பேசுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள், மருத்துவ முகாம், தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நவ. 24-ஆம்தேதி கரூா் வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடா்ந்து குளித்தலை, தரகம்பட்டி, அரவக்குறிச்சியில் நடைபெற்ற முகாம்களில் 1,002 மனுக்கள் பெறப்பட்டது. அதில் உடன் நடவடிக்கைகள் எடுக்க கூடியவைகள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டது. பிற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் டி.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வட்டாட்சியா் மதிவாணன்(புகளூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.