இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் ஆத்தூரைச் சோ்ந்தவா் சுப்ரமணி(51). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் -திண்டுக்கல் சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சுப்ரமணியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநா் கடலூா் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் விக்னேஷ்(24) என்பவரை தேடி வருகின்றனா்.