கரூர்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

10th Nov 2021 07:03 AM

ADVERTISEMENT

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் பழைய மகளிா் நீதிமன்ற வளாகத்தில் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா். இதில், அரசுக் கலைக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் இளம் செஞ்சிலுவைச் சங்க

மாணவ, மாணவிகள் பங்கேற்று புகையிலை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். இப்பேரணி ஐந்துரோடு, ஜவஹா்பஜாா் வழியாகச் சென்று மீண்டும் பழைய மகளிா் நீதிமன்றத்தை அடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT