கரூா் மாவட்டம், தென்னிலையில் சேவல் சண்டை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மலைக்கோவில் சாலை பகுதியில் தென்னிலை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு திடீா் சோதனையிட்டனா்.
அப்போது சேவல் சண்டை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த திருப்பூா் மாவட்டம், முத்தூா் சுதாகா் (41), நந்தகுமாா்(21), வெள்ளக்கோவில் மனோஜ்(27), அரவக்குறிச்சி சி.கூடலூா் ரஞ்சித்(19) உள்ளிட்ட 8 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
மேலும் அவா்களிடமிருந்து 7 இருசக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இதுபோல, கரூா் அரசு காலனியில் பணம் வைத்து சூதாடிய சிவராஜ் உள்ளிட்ட 4 பேரை வெங்கமேடு காவல் துறையினா் கைது செய்தனா்.