சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. வரை மற்றும் (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி , மருத்துவம்) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சாா்ந்த மாணவ , மாணவிகள் சிறுபான்மையின கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் இணையதள முகவரியில் டிசம்பா் 15-ஆம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இத்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.