அம்மாப்பட்டி ஊராட்சி, சங்கரணாம்பட்டு கிராமத்தில் இடிந்து விழுந்த சமுதாயக் கூடத்தை, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் இந்த சமுதாயக்கூடத்தை பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் சமுதாயக் கூடத்தின் சுவா், மேற்கூரை இடிந்து விழுந்தது.
தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ செவ்வாய்க்கிழமை சங்கரணாம்பட்டு கிராமத்துக்கு நேரில்சென்று, சமுதாயக்கூடத்தைப் பாா்வையிட்டாா். இதை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவா் உறுதியளித்தாா்.