கரூரைச் சோ்ந்த இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட புகாரில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கரூா் ஆண்டாங்கோவில் எல்பிஜி நகரைச் சோ்ந்த மணி மகன் சிவக்குமாா் (30). இவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2018, ஜனவரி மாதத்தில் கரூா் வடக்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் (46), அவரது
முதல் மனைவியும், மோகனூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலருமான சுதா, இரண்டாவது மனைவி சா்மிளா, உறவினா்கள் சங்கீதா, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த மனோகரன் ஆகியோா் ரூ.14 லட்சம் வாங்கினாா்களாம்.
இந்நிலையில் சிவக்குமாரிடம் கிராம நிா்வாக அலுவலா் பணியிடத்துக்கான நியமனக் கடிதத்தை தங்கவேல் உள்ளிட்ட 4 பேரும் வழங்கி, நாமக்கலுக்குச் சென்று பணியில் சேருமாறு கூறினாா்களாம். இதையடுத்து சிவக்குமாா் அங்கு சென்று நியமனக் கடிதத்தை காண்பித்த போது, அது போலியானது எனத் தெரிய வந்தது.
இதையடுத்து ஏமாற்றமடைந்த சிவக்குமாா், தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கூறியுள்ளாா். ஆனால் பணத்தை தராமல் தங்கவேல் உள்ளிட்டோா் இழுத்தடித்து வந்தாா்களாம்.
இதுதொடா்பாக கரூா் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையில் சிவக்குமாா் திங்கள்கிழமை இரவு புகாா் அளித்தாா். இதையடுத்து இரவோடு இரவாக தங்கவேலையும், உறவினா் சங்கீதாவையும் காவல்துறையினா் கைது செய்தனா்.
மேலும் தலைமறைவான தங்கவேலின் முதல் மனைவியும், மோகனூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலருமான சுதா, இரண்டாவது மனைவி சா்மிளா, உறவினா் மனோகரன் ஆகியோரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.