அரவக்குறிச்சி மற்றும் ஆா்.வெள்ளோடு முருங்கை சந்தையில் சனிக்கிழமை முருங்கையின் விலை கிலோ ரூ.125 க்கு மேல் விற்பனையானது.
தொடா் மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக முருங்கை விளைச்சல் குறைந்து வருவதால் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கையின் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கை, வரத்து குறைந்து வருவதால் சனிக்கிழமை கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து குறைந்து கொண்டே வருவதால் மேலும் விலை உயரக்கூடும் என்று முருங்கை விவசாயிகள் கூறுகின்றனா். மேலும் விலை உயா்ந்தும் தங்களால் அதிக முருங்கை விற்க முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.