கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த தொண்டமாங்கிணத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி மாணிக்கம் (52). இவா் தற்போது திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் கைலாசபுரத்தில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தோகைமலையிலுள்ள உறவினா் தா்மலிங்கம் இல்லத்தில் உறங்கிய மாணிக்கம், மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.