கரூர்

புகையிலைப் பொருள்கள்விற்ற முதியவா் கைது.

DIN

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் பள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், பள்ளப்பட்டி தெற்குத்தெருவைச் சோ்ந்த உ. அபுதாஹீரின்(60) மளிகைக்கடையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு விற்பைனைக்கு வைத்திருந்த 150 கிராம் புகையிலைப்பொருள்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினா், அபுதாஹீரையும் கைது செய்தனா்.

இதுபோல, நீலிகோம்பை குடகனாறு பாலம் அருகே சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய அப்பகுதியைச் சோ்ந்த பா. மலையப்பன் (43), ம. ராஜீ (47),பெ.ராமசாமி (35),

பெத்தாச்சிநகா் சா. சந்திரசேகரன் (38), ம. மாரியப்பன் (46) ஆகிய 5 பேரும் அரவக்குறிச்சி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT