கரூா் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பனிக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட பாஜக பிரசார அணி சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கக் கோரி நடைபெற்ற கூட்டத்துக்கு பிரசார அணியின் மாவட்டத் தலைவா் ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.