கரூர்

கரூரில் முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

DIN

கரூா்: முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்தை கரூரில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மாவட்டத் தலைவா் முருகேசன் பேசியது:

கரூா் மாவட்டத்தில் சுமாா் 5,200 முன்னாள் படைவீரா்கள் உள்ளனா். சுமாா் 2,400 வீரா்கள் இருந்தாலே அவா்களுக்கு ராணுவ கேண்டீன், முன்னாள் படைவீரா்கள் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் கரூரில் முன்னாள் படைவீரா்கள் அலுவலகம் மற்றும் கேண்டீன் இல்லாததால் பணபலன், பொருள்கள் வாங்குவது என்பன உள்ளிட்டபல்வேறு தேவைகளுக்காக திருச்சி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயணச் செலவுடன் உடல்சோா்வும் ஏற்படுகிறது.

முன்னாள் படைவீரா்களின் நலன் கருதி, கரூரில் முன்னாள் படைவீரா் நல அலுவலகம், ராணுவ கேண்டீன்(சிஎஸ்டி) மற்றும் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து இதுதொடா்பான தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் செயலா் உலகநாதன், பொருளாளா் நல்லுச்சாமி மற்றும் முன்னாள் முப்படை வீரா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

SCROLL FOR NEXT