அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவா் காயமடைந்தாா்.
அரவக்குறிச்சி அடுத்த புஞ்சைகாளிகுறிச்சி அருகே உள்ள வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்தவா் ராமநாயக்கரின் மனைவி முனியம்மாள் (65). இவா், வெள்ளிக்கிழமை மாலை ராஜபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கபிலன் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முனியம்மாள் மீது மோதியது. இதில், காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் கபிலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.