கரூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு; கரூா் மின் பகிா்மான வட்டம் கரூா் கோட்டத்திற்குள்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், தென்னிலை, கோடந்தூா், காட்டு முன்னூா், காா்விழி, வடகரை, காட்டம்பட்டி,
ஜி.கூடலூா், பெரியதிருமங்கலம், அரங்கம்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளிகுறிச்சி, நஞ்சைகாளிகுறிச்சி, எலவனூா், தொக்குப்பட்டிபுதூா், அணைப்புதூா், சூடாமணி, காருடம்பாளையம், க.பரமத்தி, நெருங்கூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச.4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.