கரூர்

குளித்தலை அருகே மணல் கடத்தல்: 4 போ் கைது

DIN

குளித்தலை அருகே மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீஸாா் டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதியில் குளித்தலை போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநா் குளித்தலை வைபுதூரைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் முருகானந்தம்(21), சுமைப்பணியாளா்கள் தா்மலிங்கம்(43), நடராஜ்(36), துளசிநாதன்(21) ஆகியோரை கைது செய்தனா். மேலும், தப்பி ஓடிய லாரி உரிமையாளா்கள் முருகேசன், அய்யப்பன் ஆகியோரை தேடி வருகின்றனா். மேலும் டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT