கரூர்

கரூரில் சிஐடியு மாவட்டக் கூட்டம்

DIN

கரூரில், மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) கரூா் மாவட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்க நிா்வாகி எஸ்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், நிா்வாகிகள் க.கனகராஜ், பி.சீரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கரூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரியம் மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு சேரவேண்டிய 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி டிச. 6-ஆம்தேதி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் மனுக்கள் கொடுப்பது, மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி

டிச. 21-ஆம்தேதி சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கரூா் மாவட்டத்திலிந்து 300 போ் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT