கரூா் தாந்தோணிமலை மலா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் பிளஸ்-2 பொதுத் தோ்வு முடிவகள் வெளியிடப்பட்டது. இதில், கரூா் தாந்தோணிமலை மலா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நாட்ராயன் முதலிடத்தையும், பரணீதரன் இரண்டாமிடத்தையும் பள்ளி அளவில் பிடித்தனா். இவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித்தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்து, மாணவா்களை பாராட்டினாா். விழாவில் பள்ளி துணை முதல்வா் ஜெயசித்ரா, ஆசிரியா் தா்மலிங்கம் மற்றும் ஆசிரியைகள் அழகம்மாள், அனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.