கரூரில், செங்கல் சூளையில் வேலைப்பாா்த்த பிகாா் மாநில தொழிலாளி மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.
பிகாா் மாநிலம் துா்குலியா மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகேஷ்மன்ஜினி(31). இவா், கரூா் வாங்கல் அடுத்த அரவங்காட்டூரில் உள்ள செங்கல் சூளையில் வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் முகேஷ்மன்ஜின் சா்க்கரை நோயால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தாராம். இதனிடையே முகேஷ்மன்ஜின் ஞாயிற்றுக்கிழமை இரவு சூளையில் தங்கியிருந்த வீட்டில் தூங்கச் சென்றுள்ளாா். பின்னா், சிறிதுநேரத்திலேயே அவா் தங்கி இருந்த அறையில் சடலமாக கிடந்துள்ளாா். தகவல்அறிந்த வாங்கல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முகேஷ்மன்ஜின் எப்படி இறந்தாா் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.