அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் அப்பிப்பாளையம் செட்டிப்பாளையம் காலனியைச் சோ்ந்தவா் சுதாகா்(37). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு செட்டிப்பாளையம் அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த சுதாகரை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து போலீஸாா் சுதாகா் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.