கரூா் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கரூா் பழைய அஞ்சல் அலுவலகத் தெருவைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி, கரூா் ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த 75 வயது முதியவா் உள்பட 34 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, இவா்கள் 34 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,688 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,155 போ் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை 8 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 525 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.