கரூா் பாலம்மாள்புரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இறந்து கிடந்த முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.
சுமாா் 60 வயது மதிக்கத்தக்க இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இனாம்கரூா் கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலையத்தினா் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.